96 is a Tamil Romantic Movie released on 4 October 2018. This movie is directed by C. Prem Kumar and produced by S.Nanthagopal. Whereas Vijay Sethupathi and Trisha Krishnan are in the lead role of the movie. The film is based on two high school students Vijay Sethupathi and Trisha Krishnan who meets at a reunion after a long period of 22 years and fall in love by reminding their past. Check, below the list of 96 Tamil Movie MP3 Songs.
Listen and Download 96 movie Songs.
1. Yean
Yean Song from 96 is sung by Gowri TP and composed by Govind Vasantha, starring Vijay Sethupathi, Trisha Krishnan. Check below to find the Yean MP3 song listen and download click here.
Yean.. Yedhum
Kooraamal ponaayo
Yen… Netrai
Poottaamal ponaayo
Saambalaai varam
Enge en megam
Vidugathaiyaai ganam
Kanneeril pogum
Paatham
Thooramaai ponadhe
Kadhalin keerthanai
Veezhnthidum neerellaam
Theduthalin praarthanai
Oorai thaandi
Ponaan endraal
Angum ingum
Kan thedum
Verai thaandi
Ponaan endraal
Unmai ulle panthaadum
Theernthathe ganam
Engae un vaanam
Thadayenave varum
Kanneerin theeraa baaram
Veguthe naalai
Enge un pathai
Siragugalai paarai
Tharaiyinil saagum naalai
2. Vasantha Kaalangal
Vasantha Kaalangal song sung by Chinmayi. Vasantha Kaalangal Song Composed by Govind Menon. Lyrics are written by Uma Devi. the movie startting Vijay Sethupathi and Trisha. Check below to find the Vasantha Kaalangal MP3 song listen and download click here.
வசந்த காலங்கள் கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ…
உயிரின் தாகங்கள் கிடந்தது சாகுதே
கடந்த காலங்கள் வாராதோ…
பார்வையின் பாராமையில் வாழுமோ என் நெஞ்சம்…
வார்த்தைகள் கோழைபோல் யாழிருந்தும் ராகமின்றியேங்கி போகுதே
வசந்த காலங்கள் கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ…
ஹ்ம்ம்…காதலின் வேதங்களில்
நியாயங்கள் மாறி போகுதே
எண்ணங்கள் மீறிடுதே
வா…பாரங்கள் மேகம் ஆகுதே
பாதைகள் நூறாய் தோன்றுதே
உன்னோடு ஒன்றாகவே
காதல் நிலவாய் அட நான் காயவா
காலை ஒளியில் ஏமாறவா வா…
காயும் இருளில் அட நீ வாழவா
விடியுமிந்த காலை நமதே அழகே…
வசந்த காலங்கள் கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ…
3. Thaabangale
Thaabangale Roobangalai Paduthe song sung by Pradeep Kumar, Chinmayi. Thaabangale Roobangalai Paduthe Song Composed by Govind Menon. Thaabangale Roobangalai Paduthe Song Lyrics was Penned by Uma Devi.
தாபங்களே ரூபங்களாய் பாடுதே
தொடுதே அழகினை சூடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே
தாபங்களே ரூபங்களாய் பாடுதே
தொடுதே அழகினை சூடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே
காலம் இரவின் புரவி ஆகாதோ
அதே கானா அதே வினா
வானம் நழுவி தழுவி ஆடாத
அதே நிலா அருகினில் வருதே
தாபங்களே ரூபங்களாய் பாடுதே
தொடுதே அழகினை சூடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே
நான் நனைத்திடும் தீயா பெய்யும் நிலா நீயா
நான் அணைந்திடுவேனா ஆலாபனனை தானா
காதல் கனாக்கள் தானா தீரா உலா நானா, போதாதா
காலம் வினாக்கள் தானா போதும்…
அருகினில் வர மனம் உருகித்தான் கறையுதே
தாபங்களே ரூபங்களாய் பாடுதே
தொடுதே அழகினை சூடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே
Listen & Download Thaabangale MP3 Song.
4. Iravingu Theevai
Iravingu Theevai song sung by Pradeep Kumar, Chinmayi. Iravingu Theevai Song Composed by Govind Menon. Iravingu Theevai Song Lyrics was Penned by Uma Devi. Check below to find the Iravingu Theevai MP3 song listen and download click here.
இரவிங்கு தீவாய் நமை சூழுதே
விடியலும் இருளாய் வருதே
நினைவுகள் தீயாய் அலை மோதுதே
உடலிங்கு சாவாய் அழுதே
பிரிவே உருவாய் கரைந்து போகிறேன்
உயிரின் உயிராய் பிரிந்து போகிறேன்
மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்
வறண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்
கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்
இரவிங்கு தீவாய் நமை சூழுதே
விடியலும் இருளாய் வருதே
நினைவுகள் தீயாய் அலை மோதுதே
உடலிங்கு சாவை அழுதே
இந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே
அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயிதே
ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே
அட காலங்கள் தடை மீறி தடை போடுதே
நீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வை
வாழ்வே வா நீ தான் உயிரின் உயிரே
வரவா… வரவா…
தினம் தினம் உயிர் தெழும்
மனம் அன்றாடம் மாயுமே
உயிர் வரை நிறைந்துனை
மனம் கொண்டாடி வாழுமே
மரங்கள் சாய்ந்து கூடு
வீழ்ந்து குயில்கள் ராகம் பாடுமே
இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்
நிலவு பொறுமை காக்குமே
மழை வழி கடல் விடும்
வின்காதல் மண்ணை சேருமே
உனை உடல் பிரிந்தினும்
என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே
நீ போய் வா வா வா
5. Kaathalae Kaathalae
sung by Chinmayi, Govind Vasantha and composed by Govind Vasantha, starring Vijay Sethupathi, Trisha Krishnan. Lyrics are written by Uma Devi.
ஆ… கொஞ்சும் பூரணமே வா
நீ… கொஞ்சும் ஏழிசையே
பஞ்சவர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி
காதலே காதலே தனி பெருந்துணையே
கூடவா கூடவா போதும் போதும்
காதலே காதலே வாழ்வின் நீளம்
போகலாம் போகவா நீ… நீ
Listen & Download Kaathalae Kaathalae MP3 Song.
6. Anthaathi
Anthaathi Song from 96 is sung by Chinmayi, Govind Vasantha, Bhadra Rajin, M Nassar and composed by Govind Vasantha. Check below to find the Anthaathi MP3 song listen and download click here
பேரன்பே காதல்
உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்.
சதா, ஆறாத ஆவல்
ஏதேதோ சாயல்
ஏற்றி திரியும் காதல்
பிரத்யேக தேடல்
தீயில் தீராத காற்றில்
புல் பூண்டில் புழுவில்
உளதில் இலதில் .
தானே, எல்லாமும் ஆகி
நாம் காணும் ரூபமே
இத்தியாகி காதல்.
இல்லாத போதும்
தேடும் தேடல்
சதா, மாறாது காதல்
மன்றாடும் போதும்
மாற்று கருத்தில் மோதும்
மாளாத ஊடல்.
நாம் இந்த தீயில்
வீடு கட்டும் தீக்குச்சி.
நாம் இந்த காற்றில்
ஊஞ்சல் கட்டும் தூசி.
நாம் இந்த நீரில்
வாழ்க்கை ஓட்டும் நீர் பூச்சி.
நாம் இந்த காம்பில்
காமத்தின் ருசி.
காதல் கண்ணீரில் சிலந்தி
காதல் விண்மீனின் மெகந்தி
காதல் மெய்யான வதந்தி
காலந்தோறும் தொடரும் டைரி
காதல் தெய்வீக எதிரி
காதல் சாத்தானின் விசிறி
காதல் ஆன்மாவின் புலரி
வாழ்ந்து பெட்ர டிகிரி
ஓர் விடைகுள்ளே
வினாவெல்லாம் பதுங்குதே
ஹா.. நாள் கரைந்ததே
மறைந்ததேமுடிந்ததே ஹா..
கொஞ்சும் பூரணமே வா
நீ கொஞ்சம் எழிலிசையே
பஞ்ச வர்ண பூதம்
நெஞ்சம் நெறையுதே
காண்பதெல்லாம் காதலடி..
காதலே காதலே
தனிப்பெரும் துணையே
கூட வா கூட வா போதும் போதும்
காதலே காதலே வாழ்வின் நீளம்
போகலாம் போகவா நீ….
ஆ திகம்பரி
வலம்புரி
சுயம்பு நீ
ஆ..பிரகாரம் நீ
பிரபாவம் நீ
பிரபாகம் நீ நீ
ஆ.. ஆ.. சிங்காரம் நீ
ஆங்காரம் நீ
ஓங்காரம் நீ நீ நீ
அந்தாதி நீ அந்தாதி நீ
அந்தாதி நீ நீ
ம்ம்ம் தேட வேண்டாம்
முன் அறிவிப்பின்றி வரும்
அதன் வருகையை
இதயம் உரக்க சொல்லும்
காதல்..காதல்
ஒரு நாள் உங்களை வந்தடையும்
அதை அள்ளி அனைத்துக்கொள்ளுங்கள்
அன்பாக பார்த்து கொள்ளுங்கள்
காதல் தங்கும்
காதல் தயங்கும்
காதல் சிரிக்கும்
காதல் இனிக்கும்
காதல் கவிதைகள் வரையும்
காதல் கலங்கும்
காதல் குழம்பும்
காதல் ஓரளவுக்கு புரியும்
காதல் விலகும்
காதல் பிரியும்
கதவுகளை மூடாமல் வழி அனுப்புங்கள்.
காத்திருங்கள்.
ஒரு வேலை காதல் திரும்பினால்
தூரத்தில் தயங்கி நின்றால்.
அருகில் செல்லுங்கள்
அன்புடன் பேசுங்கள்
போதும் காதல் உங்கள் வசம்
உள்ளம் காதல் வசம்
மாற்றங்களே வினா
மாற்றங்களே விடை
7. The Life Of Ram
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை
நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதே அர்த்தம் ஆ க்குதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
வாழா என் வாழ்வை வாழவே
தாளாமல் மேலே போகிறேன்
தீரா உ ள்ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இங்கே இன்றே ஆழ்கிறேன்
யாரோப்போல் நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்
நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்தே
காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்
இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா
நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறக்கிறேன்
வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன்
தோ காற்றோடு வல்லூறு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய்
நிகழே அதுவாய்
நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் திறந்தே
காண்கின்ற கட்சிக்குள் நான் மூழ்கினேன்
திமிலெரி காலை மேல் தூங்கும் காகமாய்
பூமி மீது இருப்பேன்
புவி போகும் பொக்கில் கை கோர்த்து
நானும் நடப்பேன்
ஏதோ ஏகம் எழுத்தே ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே
ஆரோ ஆரிராரிரோ ஆரோ ஆரிராரிரோ
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை
நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதை அர்த்தம் ஆகுதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே